முன்னாள் அமைச்சர் ராஜித கைது

முன்னாள் அமைச்சர் ராஜித கைது

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (13) புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு பிரிவின் தலைமையகத்தில் அவர் சரணடைந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவானினால் முன்னாள் அமைச்சர் ராஜின சேனாரத்னவிற்கு வழங்கியிருந்த பிடியாணையினை இரத்துச் செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.