வாகன விபத்தில் ஊடகவியலாளர் மிதுன்சங்கர் உயிரிழப்பு

வாகன விபத்தில் ஊடகவியலாளர் மிதுன்சங்கர் உயிரிழப்பு

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் இன்று (13) புதன்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஊடகவியலாளர் மிதுன்சங்கர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் மீது உழவு இயந்திரம் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

திருகோணமலை, இன்ன காபர் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய குறித்த ஊடகவியலாளர், மூன்று நண்பர்களுடன் இரண்டு மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பு - வந்தாறுமூலையில் இருந்து கல்முனையிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இவர், மோட்டர் சைக்கிள்களை வீதி ஓரத்தில் நிறுத்திய போது பின்னால் வந்த உழவு இயந்திரம் மோட்டர் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊடகவியலாளர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.